ஆகாதது எதுவுமில்லை – உம்மால்
ஆகாதது எதுவுமில்லை
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
4. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
6. எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
8. கானவ+ரில் வார்த்தை சொல்ல கப்பர்நாகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
Dec 11, 2009
அப்பா பிதாவே அன்பான தேவா
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்
நன்றி உமக்கு நன்றி (அப்பா)
2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்
3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே
4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே
5. ஒன்றை நான் கேட்பேன்
அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்பணி செய்திடுவேன் - நன்றி
அருமை இரட்சகரே ஆவியானவரே
1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்
நன்றி உமக்கு நன்றி (அப்பா)
2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்
3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே
4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே
5. ஒன்றை நான் கேட்பேன்
அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்பணி செய்திடுவேன் - நன்றி
Subscribe to:
Posts (Atom)