Mar 10, 2017

Pranapriyaa… pranapriyaa…(Nanni yesuve...)

Pranapriyaa… pranapriyaa…
changile chora thannenne
veendeduthavane…… veendeduppukaara….

praanapriyan thante changile chorayaal
enneyum veendeduthu (2)

kripaye… kripaye.. varnnippaan asaddhyame athe.. (2)

Nanni yesuve...
Nanni yesuve...
Ni cheytha nanmakalk oorayiram nanni (2)
En shakthiyaal alla..  kayude bhalathaal alla
Nin dayayalayoo enna nadathiyathu (2)
ninnathe… kripayaal.. kripayaal.. daivakripayaal
nirthidum… dayayaal.. dayayaal.. nithya dayayaal

kozhithan kunjine chirakadiyil maraykkum pole
kazhukan than kunjine chirakin meethe vahikkum pole (2)
enniyaal enniyaal theeraatha nanmakal
cholliyaal cholliyaal theeraatha vankripakal (2);-
Nanni yesuve...

koorirul thaazhvarayil bhayam koodaathe enne nadathiyathaal
vaishamyamedukalil karam pidichu enne nadathunnathaal.. (2)
enniyaal enniyaal theeraatha nanmakal
cholliyaal cholliyaal theeraatha vankripakal (2);-
Nanni yesuve...

 Nanni yesuve................... Nanni yesuve.......................
Ni cheytha nanmakalk….. oorayiram nanni…………… (2)

Mar 14, 2012

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா

 

நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

 

நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்

 

என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்

 

நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னை
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

 

என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே

எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார்

1.
காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
   
தூய தேவ அன்பே 
   
இவ் வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை 
   
இனிதாய் வருந்தி அழைத்தார்

2.
கானகப் பாதை காரிருளில்
   
தூய தேவ ஒளியே 
   
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை 
   
அரும் நீரூற்றாய் மாற்றினாரே

3.
கிருபை கூர்ந்து மனதுருகும்
   
தூய தேவ அன்பே 
   
உன் சமாதானத்தின் உடன்படிக்கைதனை 
   
உண்மையாய்க் கர்த்தர் காத்துக்கொள்வார்

4.
இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
   
தூய தேவ தயவால் 
   
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினில் 
   
கிடைக்கும் இளைப்பாருதல்

5.
வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
   
தூய தேவ அருளால் 
   
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் 
   
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
 
1.தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் எங்கள்
பரிகார பலியானீர்
 
2.காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
துய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
 
3.அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி?
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா
 

4.நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

 

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை - 4

1.
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே (2)
இதுவரையில் உதவினீரே - உம்மை
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை - 2

2.
எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை
முழு உள்ளத்தோடு...

3.
யெகோவா ராப்பா யெகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா - உம்மை
முழு உள்ளத்தோடு...

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

1.        அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் ப+மியில்ஆட்சிசெய்வார்
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்

2.
தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

3.
சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

4.
பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர்பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

5.
ஆழ்கடலே, சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலைஅலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள

 

அமர்ந்திருப்பேன் அருகினிலே

அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாழ மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் - 2