Mar 14, 2012

அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார்

1.
காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
   
தூய தேவ அன்பே 
   
இவ் வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை 
   
இனிதாய் வருந்தி அழைத்தார்

2.
கானகப் பாதை காரிருளில்
   
தூய தேவ ஒளியே 
   
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை 
   
அரும் நீரூற்றாய் மாற்றினாரே

3.
கிருபை கூர்ந்து மனதுருகும்
   
தூய தேவ அன்பே 
   
உன் சமாதானத்தின் உடன்படிக்கைதனை 
   
உண்மையாய்க் கர்த்தர் காத்துக்கொள்வார்

4.
இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
   
தூய தேவ தயவால் 
   
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினில் 
   
கிடைக்கும் இளைப்பாருதல்

5.
வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
   
தூய தேவ அருளால் 
   
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் 
   
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

No comments: