Mar 12, 2012
நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் - 2
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் -2
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே -2
தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா – 2
அக்கினியில் நடந்த போதும் -(கடும்) - 2
எனை மீட்டது உம் கிருபையப்பா – 2
........ நீங்க மட்டும்
நிந்தைகள் அவமானம் சூல்ந்தபோது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா – 2
விக்கினங்கள் சூல்ந்தபோது – (மரண) - 2
எனை மீட்டது உம் கிருபையப்பா – 2
........ நீங்க மட்டும்
அன்னையின் கருவில் தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா – 2
வழிதப்பி அலைந்தபோது – (உந்தன்) – 2
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா - 2
........ நீங்க மட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment