Sep 24, 2009

பாடல் 12: ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆவியானவரே

எங்கள் ஆராதனைக்குள் - இன்று

வாசம் செய்கிறீர் - 2

 

   அல்லேலூயா ஆராதனை - 4

   ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

 

1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்

   சீயோன் உச்சியிலும்

   கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்

   என்னில் நீர் வாசம் செய்யும் - 2       அல்லேலூயா

 

2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்

   நீர் மேல் அசைந்தீர்

   துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்

   என்னில் நீர் வாசம் செய்யும் - 2       அல்லேலூயா

 

3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்

   பலிபீட நெருப்பிலே

   இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்

   உள்ளத்தில் வாசம் செய்யும் - 2    அல்லேலூயா

 

Sep 17, 2009

பாடல் 11: அகிலத்தையும் ஆகாயத்தையும்

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே
ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனமகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை

பாடல் 10: அமர்ந்திருப்பேன் அருகினிலே

அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாழ மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் - 2