Jan 13, 2011

ஆராதிப்போம் நம் தேவனை 3

வல்லமை உண்டு உண்டு

அற்புத வல்லமை

இயேசுவின் இரத்தத்தால்

வல்லமை உண்டு உண்டு

அற்புத வல்லமை

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்


என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே

இயேசென்னை இரட்சித்தார்

நான் ஆடிப் பாடுவேன்

எவரும் அறியாரே

என் உள்ளம் பொங்குதே

என் உள்ளம் பொங்கிப்

பொங்கிப் பொங்கிப்

பொங்கி வழியுதே

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

1.மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந்

2.பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் - பொழிந்

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே 

ஆராதிப்போம் நம் தேவனை 2(E)

நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை 
நாவாலே என்றும் பாடு 
வல்லவர் நல்லவர் போதுமானவர் 
வார்த்தையில் உண்மையுள்ளவர்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே சொந்தமும் நீரே 

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே

இயேசென்னை இரட்சித்தார்

நான் ஆடிப் பாடுவேன்

எவரும் அறியாரே

என் உள்ளம் பொங்குதே

என் உள்ளம் பொங்கிப்

பொங்கிப் பொங்கிப்

பொங்கி வழியுதே


 ஐயா வாழ்க வாழ்க 

உம் நாமம் வாழ்க


சந்தோசம் பொங்குதே (2)
சந்தோசம் என்னில் பொங்குதே - அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் என்னில் பொங்குதே 
 


ஆராதிப்போம் நம் தேவனை 1(Dm)

Dm
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்

1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்

ஆண்டவர் இயேசுவிலே

விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை

2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை

3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை

உம்மையே நான் நேசிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!

உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே!

உம்மையே நான் ஆராதிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே
!